பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெரும் பணியில்

காந்தி உலக மையம் (காந்தி வேர்ல்ட் பவுண்டேஷன்) ஒரு அரசியல் சாராத, தொண்டு செய்யும் சமூக சேவை அமைப்பாகும். காந்திய சிந்தனைகளையும், சமூக மாற்றத்திற்காண மாறுபட்ட செயல்பாடுகளையும்,  இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில், எண்ணற்ற விழிப்புணர்வு முகாம்கள், செயல்பாடுகள் மூலமாகவும் விதைத்து, மக்களின் மகிழ்ச்சிக்கும் மாற்றத்திற்குமான  ஆணிவேரை பலப்படுத்துவதும், குறிப்பாக வருங்கால இளம் தலைமுறைகளின்  மனநல பாதுகாப்பு, பாரம்பரிய மீட்டெடும்பு  மற்றும்  கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறக்கட்டளை ஆகும்.

மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா, தமிழக ஆளுநர் உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்கள் காந்தி உலக மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.